தனிநபர் ஒருவரை ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 02 இல் உள்ள வீடமைப்புத் தொகுதியின் அடுக்குமாடி குடியிருப்பை வழங்குவதாக உறுதியளித்து தனிநபர் ஒருவரிடமிருந்து 7 மில்லியன் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கஹந்தகம கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூன் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (NW)
No comments