Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

ரணில் விக்ரமசிங்க மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பிமல் ரத்நாயக்க

 


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உற்பட, பட்டலந்த சித்திரவதை முகாம்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட வழிமுறைகள் மூலமாகவும், தேவைப்பட்டால், சர்வதேச உதவியுடனும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகிறார்.



"ரணில் விக்ரமசிங்கவின் செயல்களுக்குப் பொறுப்பேற்கவும், இந்தக் கொலையாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யவும், அது அவர்களின் வாழ்க்கையின் பிற்பகுதியில் கூட, சட்டத்திற்குள் சாத்தியமான அனைத்து விசாரணைகளையும் நாங்கள் மேற்கொள்வோம்," எனவும் அவர் கூறினார்.



பட்டலந்த கமிஷன் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதத்தின் முதல் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். (NW)


No comments