கடந்த (25) இரவிலிருந்து நாடு முழுவதும் அமுல்படு்த்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக அநுராதபுர மாவட்டத்தின் இக்கிரிகொள்ளாவ பிரதேசத்தின் மக்கள், சட்டத்திற்கு மதிப்பளித்து நடந்து கொள்வதாக பிறைநிலா பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு கடந்த 24 மணித்தியாலத்திற்குள் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இதேவேளை பிரதேசத்தின் குறுந்தெருக்களையும் பயணத்திற்காக மக்கள் பயன்படுத்த வேண்டாம் என பொலிஸாரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அறிவித்தல்களுக்கு மதிப்பளித்து பள்ளிவாயல்களில் கூட்டாக தொழும் செயற்பாடும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -அஸ்மியா சரீப், இக்கிரிகொள்ளாவ-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close