புத்தளம் மாநகர சபை தலைவர் அப்துல் பாயிஸ் உயிரிழந்தமை தொடர்பில் சாரதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை ஊடாக குறித்த மூவரும் மதுஅருந்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். புத்தளம் மாநகர சபை தலைவர் ஏ. அப்துல் பாயிஸ் மற்றும் அவரது குழுவினர் வண்ணாத்திவில்லு பகுதிக்கு சென்றுள்ள நிலையில் நேற்று குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பாரிய காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை புத்தளம் மாநகர சபை தலைவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.(CN)
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close