நேற்று இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் உச்சத்தை தொட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலையின் தாக்கம் சடுதியாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் முதல் தடவையாக 2500 க்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய நேற்றைய தினம் 2659 தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 125,893 ஆக அதிகரித்துள்ளது.(SN) -சாமில் சியாத்-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close