அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆறாயிரத்து முப்பதாக அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 362 குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,445 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 9,924 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 9,209 பேர் சிகிச்சை நிலையங்களில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 661 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (CN)
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close