தற்போது அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலத்தில்(Boys School) பிரதி அதிபராக கடமையாற்றி வரும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த A.L. ஜெய்னுதீன் அவர்கள் இலங்கை அதிபர் சேவையின்(SLPS -1) 1ம் வகுப்பிற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அரசாங்க சேவை கல்விச்சேவை ஆணைக்குழுவினரின் 2021/04/19 ஆம் திகதி தீர்மானத்தின்படி இவர் முதலாம் தர அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அக்கரைப்பற்று அல்-பாத்திமியா வித்தியாலயம், அக்கரைப்பற்று தேசிய பாடசாலை என்பவற்றின் பழைய மாணவரான இவர், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பவற்றில் பட்டங்களைப் பெற்றுள்ளார். 1988ம் ஆண்டு அரச சேவையில் இணைந்து கொண்ட இவர் இளைஞர் சேவை உத்தியோகத்தராகவும் (YSO), புள்ளி விபரவியல் உத்தியோகத்தராகவும் (SI), பட்டதாரி ஆசிரியராகவும் , ஆசிரிய ஆலோசகராகவும் (ISA), அதிபராகவும் (Pr) சேவையாற்றியிருந்தார். இவ்வாறு பல்வேறு பதவிகள் ஊடாக பலரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். பல்வேறு பொது சேவைகளில் ஈடுபட்டுவரும் இவர் கடந்த பல வருடங்களாக அக்கரைப்பற்று அர்-ரஹிமியா வித்தியாலத்தில் அதிபராக கடமையாற்றி அப் பாடசாலையின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் அதீத பங்களிப்பினை நல்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -மன்சூர், ஆசிரிய ஆலோசகர் அக்கரைப்பற்று கல்வி வலயம்-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close