கொத்தட்டுவ சுகாதார பிரிவு வைத்தியசாலையில் இன்று முதல் ஸ்புட்னிக்V தடுப்பூசி யின் இரண்டாவது டொஸ் வழங்க ஆரம்பிக்கப்பட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய அதிகாரி அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதேபோல் அனைத்து வர்த்தக வலய வியாபாரிகளுக்கும் அடுத்த மாதம் முதல் தடுப்பூசி வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இளைஞர் மட்டும் விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை நுவரெலியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஹோல்பூருக் மற்றும் எல்பொத்த கிராம சேவகர் பிரிவுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று காலை 8.30 முதல் ஹோல்புருக் தமிழ் வித்தியாலயத்தில் வழங்கப்படும் என பிரதேச பொது சுகாதார பரிசோதகர் சிவக்கொழுந்து புஷ்பகாந் தெரிவித்துள்ளார். அதேபோல் வட்டவளை கிராம சேவகர் பிரிவிற்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கபட உள்ளதாக வட்டவளை சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.(HN) -ஸாமில் ஸியாத்-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close