முஸ்லிம் ஆசிரியைகள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றுநிருபத்தை வெளியிடுமாறு கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான், கல்வி அமைச்சரிடம் எழுத்துமூல கோரிக்கை ஒன்றை
இன்று 10.05.2019 வெள்ளிக்கிழமை அமைச்சரை சந்தித்தபோது முன்வைத்தார். அந்த கோரிக்கையில்
இன்று நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த ஹிஜாப் தொடர்பான பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளது.அத்துன் ஹிஜாப் அணிவதுதொடர்பாக பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதை தாங்கள் அறிவீர்கள். கடந்த சில நாட்களாக சில பாடசாலைகளில் ஹிஜாப் அணிந்த ஆசிரியைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்று 10.05.2019 வெள்ளிக்கிழமை அமைச்சரை சந்தித்தபோது முன்வைத்தார். அந்த கோரிக்கையில்
இன்று நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த ஹிஜாப் தொடர்பான பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளது.அத்துன் ஹிஜாப் அணிவதுதொடர்பாக பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதை தாங்கள் அறிவீர்கள். கடந்த சில நாட்களாக சில பாடசாலைகளில் ஹிஜாப் அணிந்த ஆசிரியைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களில் முகத்தை மறைக்க தடைசெய்யப்பட்ட புர்காவுக்கும், முகத்தை மறைக்காமல் அணியும் ஹிஜாபுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை பொதுமக்கள் பலர் அறியாமையாலேயே இவ்வாறான குழப்பங்கள் ஏற்படுகின்றன.
எனவே இவ்வாறான முரண்பாடுகளை தவிர்க்க முஸ்லிம் ஆசிரியைகள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அணியும் ஹிஜாப் தொடர்பாக சுற்றுநிருபம் ஒன்று கல்வி அமைச்சால் வெளியிடப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கல்வி அமைச்சிடம் கேட்டுக் கொண்டார்.