
வவுனியா, ஈச்சங்குளம், சொலமன் பகுதியில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த 32 வயதான பெண் தனது வீட்டின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த போது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -NW-