
16-20 வயதுக்குற்பட்ட பாடசாலை மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் திட்டங்களைப் பெறுவதற்காக தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பல்வேறு தொழில் சூழல்களுக்கு மாணவர்கள் பயிற்சியளிக்கப்படாததால், தொழிற் துறையில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், 16-20 வயதிற்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களை ஒரு மாதத்திற்கு 20 மணி நேர பயிற்சித் திட்டங்களுக்கு ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிக் காலத்தில் மாணவர்களுக்கு பணம் வழங்குவதற்கு தனியார் நிறுவனங்களுக்கும் தொழிலாளர் அமைச்சகம் அனுமதி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (NW)