
தற்போதைய உலகத் தலைவர்களில் மிகவும் சக்திவாய்ந்த தலைவரே தற்போது இலங்கையை ஆட்சி செய்கிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய உலகத் தலைவர்கள் பட்டியலில் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
பொது மக்கள் தமது பொதுப் போராட்டங்களினூடாக முறைமை மாற்றத்தை விரும்புவதாக சுட்டிக்காட்டிய அபேவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் கோரப்பட்ட அந்த மாற்றத்தை ஏற்படுத்த வல்லவர் எனவும் தெரிவித்தார். (NW)