
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை வந்தவுடன் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால் தாம் ஆட்சேபிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் பிரதீப் உந்துகொட ஆகியோர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளனர்.
6.9 மில்லியன் மக்களின் ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர் பிரதமராக நியமிக்கப்படுவதை எவரும் ஆட்சேபிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.(NW)