நாடளாவிவிய ரீதியில் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதோடு வங்கிகளுக்கு செல்வதற்கு முப்படையினர் ஊடாக போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஓய்வூதியம் பெறுவோர் தேசிய அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை மற்றும் குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் மூலம் இலவசமாக பயண நடவடிக்கையினை முன்னெடுக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார். கிராம சேவையாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் உதவியுடன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுக்கும் வகையில், நாட்டின் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் இரண்டு தினங்களுக்கு திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய வங்கி உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளும் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களும் திறந்திருக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தபால் நிலையங்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு திறக்கப்படவுள்ளன. இதேவேளை நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வூதிய கொடுப்பனவு அட்டையை பயண அனுமதிப்பத்திரமாக பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.(CN)
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close