
கொழும்பு – கண்டி வீதி, கேகாலை, ரன்வல பிரதேசத்தில் வாகன விபத்தொன்று பதிவாகியுள்ளது.
கேகாலையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் கண்டி நோக்கிப் பயணித்த வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 27 வயதுடைய துல்ஹிரிய மற்றும் வெயாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வேன் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணமானதாக தெரிவித்த பொலிஸார், வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.(NW)