
-பி.எம்.பயாஸ்-
காலஞ்சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதியை சிறப்பு அரச விடுமுறை தினமாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை அன்றைய தினம் தேசிய துக்க நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தடையாக இருக்கக் கூடாது என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
