இலங்கையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை நீக்குதல் தொடர்பான முடிவை ஜூன் 14 ஆம் திகதி வரை கிடைக்கப்பெறுகின்ற கொரோனா வைரஸ் தொடர்பான தரவுகளை ஆராய்ந்த பின்னரே அரசு முடிவெடுக்கும் என இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். இன்று கம்பஹா மாவட்ட மருத்துவமனைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தரவுகளை மதிப்பாய்வு செய்த பின்னரே பயணத் தடையை நீடிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என்றார். இதேவேளை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது கொவிட் தொற்று மூலம் இறக்கும் இறப்புக்களில் 28% தற்போது காணப்படுவதாக டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(NW)
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close