சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளை பரப்புபவர்கள் மீது இலங்கை காவற்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸ் ஊடகப் சே்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். போலிச் செய்திகள் பொது இயக்கம், கொவிட் மற்றும் டெங்கு தடுப்பு திட்டங்கள் தொடர்பாக பல்வேறு சிக்கல்களை உருவாக்குவதாகவும், போலிச் செய்திகள் குறித்து சமூக ஊடகங்களை கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றை நியமிக்க குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சமூக ஊடகத் தளங்களில் போலிச் செய்திகளை உருவாக்குதல், வெளியிடுதல், பகிர்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போலி செய்திகளைப் பகிர்வதன் மூலம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துவது காவற்துறை கட்டளைச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றம் என்பதோடு இது தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும் என்றும் கூறினார். இதேவேளை சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பரப்புவதாகக் கண்டறியப்பட்ட யாராக இருந்தாலும் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (NW)
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close