கொவிட் கால விடுமுறைகளைத் தொடர்ந்து பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து, இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வியமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே கல்வி அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். தற்போதைய நிலைமைக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், அது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்று எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக பாடசாலை போக்குவரத்து சேவையாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஶ்ரீ டி சில்வா இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார். நாட்டின் தற்போதைய நிலையில் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது அடிப்படை வருமானத்தினை இழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இவ்வாறு வருமானத்தை இழந்துள்ளவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(CN)
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close