எக்ஸ் பிரஸ் கப்பல் தீப்பிடித்த நாளிலிருந்து அதிகமான கடல் வாழ் உயிரினங்கள் இறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்துருவ, கொஸ்கொட, பயாகல, வாத்துவ மற்றும் தெஹிவளை பகுதிகளில் டொல்பின், கடற்புலிகள், ஆமைகள், மீன்கள் என பல இறந்த கடல் வாழ் உயிர்கள் கரையொதுங்கியுள்ளன. இதேவேளை விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், அனைத்து கடல் ஆமைகள் மற்றும் அவற்றின் உடற்பகுதிகள் மற்றும் முட்டை போன்றவை முழுமையாக பாதுகாக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பின்னர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பப்படவுள்ளன. இதேவேளை விலங்குகளின் இறப்புக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) தெரிவித்துள்ளது.(NW)
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close